Monday, August 13, 2012

எப்போது

தமிழ் நாடு அரசுத் தேர்வாணையத் தேர்வில் வினாத் தாளோடும் விடைத் தாளோடும் ஒரு பெண்தேர்வு எழுத வந்துள்ளார். மீண்டும் படித்தவர்களின் ஈனத் தனம் தானே அதில் நமக்கு புலப் படுகின்றது.

இப்படி வாழ்ந்தால்தான் மனிதப் பிறப்பு என்று உணர்த்திய வள்ளுவரும் நாலடியாரும் இளங்கோவும் கம்பனும் பிறந்த தமிழர் நாட்டில் என்ன கொடுமை.

மலைகளில் தீ பற்றிக் கொண்டேயிருக்கின்றது. ஏழைத் தொழிலாளிகள் தான்
தீ வைக்கின்றனர் என்று அதிகாரிகள் சொல்லுகின்றனர். அதன் பின்னர் ஒரு அரசியல்வாதியோ அல்லது ஒரு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரோ இருக்கின்றார் என்பதனை ஊர் அறிந்திருக்கின்றது. சொல்ல முடியாது.
தவறு செய்கின்றவர்களைக் குறித்து காவல் நிலையத்தில் சொன்னால் காவல் நிலையமே அவர்களுக்குத் தகவல் சொல்லி புகார் கொடுத்தவரைக் கவனிக்கச் சொல்லுகின்ற நாட்டில் எங்கே குற்றவாளிகள் தண்டிக்கப் படுவார்கள்.

பிச்சைக் காரர்களிடமே காவலர்கள் கையூட்டு வாங்குவதாக வடிவேல் ஒரு படத்தில் நடிப்பார். நான் கூட மனம் நொந்தேன். ஆனால் அது நெல்லையிலே நடந்த போது  வெட்கித் தலை குனிந்தேன்.

எத்தனை தவறுகள் நடப்பினும் குற்றங்கள் நடப்பினும் நல்லவர்கள் தான் பெரும்பான்மையாக நமது நாட்டில் உள்ளார்கள். அவர்கள் செய்யும் ஒரே தவறு எதையும் கண்டு கொள்ளாமல் வாழ்ந்து விட்டுப் போய் விட வேண்டும் என நினைப்பதுதான்.

90 சதவீதம் மக்கள் நல்லவர்களாக கடவுளுக்கும் மனச் சாட்சிக்கும் பயந்தவர்களாக இருக்கின்றார்களெ ஒழிய் எதையும் எதிர்த்து போராடும் மனம் பெற்றவர்களாக வாழ்ந்து விட்டுப் போய் விடுகின்றார்களே

கொடுமை கண்டு பொங்குவாய் வா வா வா என்றான் பாரதி.
எப்போது பொங்கப் போகின்றோம்


1 மறுமொழிகள்:

said...

எப்போது... அது தான் ... ?
நல்லதொரு பகிர்வுக்கு நன்றி ஐயா...