Sunday, December 23, 2012

காங்கிரஸ் எப்படித் தேறும்

நேற்று புதுடில்லி  இளைஞர்களாலும் மாணவர்களாலும் குலுங்கியது. அரசியல் கலப்பே இல்லாத இளைய தலைமுறை பாலியல் வன்முறைக் குற்றத்திற்கு எதிராக தங்கள் நிலையை நாட்டின் தலைமகனுக்கு எடுத்துச் சொல்ல கூடியது. தனது மாளிகையில் இருந்து அந்தப் பெருமகனார் வெளியில் வந்து தனது  பிரதம மந்திரியையும் அமைச்சரவையையும் சரியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவேன் என உறுதி மொழி அளித்திருந்தால். தேவையற்ற கண்ணிற் புகைக் கூண்டுகளையும் தடியடியையும்  நியாயம் கேட்டு வந்த இளைய தலைமுறை சந்தித்திருக்காது. உள்ளாத்திலும் காயம் உடலிலும் காயம்.

சோனியாகாந்தி பெண்தானே அவர் வந்து அவர்களைச் சந்தித்திருக்கலாமே.
பிரதமர் எங்கே போனார்.  காங்கிரஸ் ஏன் அழிகின்றது என்பதற்கு இந்த முட்டாள்தனங்களை விட வேறு உதாரணம் வேண்டுமா. அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று காங்கிரஸ் முன் நிறுத்துகின்ற ராகுல் காந்தி எங்கே போனார். அந்த இளைய கூட்டாத்தின்  முன்னர் அவர் அவரது இளைய பட்டாள
அமைச்சர்களோடு வந்திருக்க வேண்டாமா.

காவற்றுரையினர் கையூட்டில் வாழ்கின்ற நாட்டில் எல்லாக் கொடுமைகளும் நடக்கும்தான்.

டில்லி முதலமைச்சர் சொல்லுகின்றார். நடப்பவை அனைத்திற்கும் டில்லி
லெப்டினண்ட் கவர்னரும் காவற்றுறையும் தான் காரணம் எனக்கும் அதற்கும்
எந்தத் தொடர்பும் இல்லை என்கின்றார். என்ன அர்த்தம் புரியவில்லை.

கவிஞர் சல்மா சொல்லுகின்றார். மரண தண்டனை இருக்கும் அரபு நாடுகளிலும் பாலியல் வன்முறை இருக்கின்றது என்கின்றார். என்ன செய்ய.

எல்லா இடங்களிலும் சாதியும் அரசியலும் நுழையும் நாட்டில்  பணத்தால் வாழ்ந்து விடலாம் என்கின்ற நாட்டில் நீதித் துறையும் சீரழிந்திருக்கும் நாட்டில் பெண்களுக்குக் கள்ளிப் பால் கொடுத்த கிராமத்தவர்கள் செயல் நியாயமாகப் போய் விடுமோ என்கின்ற அச்சம் ஏற்படுகின்றது.

0 மறுமொழிகள்: