Friday, June 14, 2013

அரசியல் புரிகின்றதா

தே மு..தி.மு.க. விலிருந்து சட்டப் பேரவை உறுப்பினர் பாண்டியராஜனும் முதல்வரைச் சந்தித்து விட்டார். அவர் சொலுகின்றார் தொகுதி மக்களுக்கு வேண்டிய காரியங்களைச் செய்வதற்காகவே முதல்வரைச் சந்தித்ததாக.இது மறைமுகமாக அ.தி.மு.க். அரசை அவமானப் படுத்துகின்ற வேலை என்பது ஏண் முதல்வர் அவர்களுக்குத் தெரிய மாட்டேனென்கின்றது.

அந்த அறிக்கையின் அல்லது நேர்காணலின் அர்த்தம் என்ன. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்ட தொகுதிகளில்  முதல்வர் அடிக்கடி சொல்லுகின்றாரே மத்திய அரசு மாற்றாந்தாய் மனப் பான்மையோடு நடந்து கொள்கிறது என்று அந்தக் குற்றச்சாட்டுத் தானே முதல்வரின் ஆட்சியின் மீதும் வைக்கப் படுகிறது.தே.மு.தி.க வின்  இதற்கு முன்னால் முதல்வரைச் சந்தித்த ஆறு சட்டப் பேரவை உறுப்பினர்களின் அறிக்கைகளும் சொன்ன செய்தியும் அதுதானே.

மத்திய அரசு எதிர்க் கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில்  இப்படி நடப்பதாகச் சொல்லுகின்ற் அதே குற்றச் சாட்டுத்தானே. எதிர்க் கட்சி வரிசையில் இருந்தால் எனது தொகுதி மக்களுக்கு நான் ஏதும் நன்மை செய்ய முடியாது என்கின்ற நிலையில்  என்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்காக இந்த்ச் செயலைச் செய்ய வேண்டியிருக்கின்றது என்று தே.மு.தி.க. சட்டப் பேரவை உறுப்பினர்களின் செய்தியிலும் உள்ளது.

_________________________________________________________________________________



எப்படியாவது கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினராக்க பெரியவர் கருணாநிதி முயலுகின்றார். யாரைச் சரிக் கட்டியாவது. 68ல்  சட்டப் பேரவையில் கொவைக் கம்பன் பெரியவர் கருத்திருமன் எதிர்க் கட்சித் தலைவராக இருந்து கனிமொழி என்று ஒரு பெண் குழந்தை ராயப் பேட்டை மருத்துவமனையிலே பிறந்திருக்கின்றதே என்று. கேட்ட பொழுது பெரியவர் கருணாநிதி தந்த பதில் கனிமொழி என் மகள். தர்மாம்பாள்(ராஜாத்தி அம்மாள்) அவளின் தாயார் என்று. கனிமொழியின் பிறப்பை அசிங்கப் படுத்தியவர்.

_______________________________________________________________________________


பெரியவர் அத்வானி என்ன ஜாதி குஜராத் முதல்வர் மோடி என்ன ஜாதி என்று பல நண்பர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டேயிருக்கின்றனர். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

0 மறுமொழிகள்: