Sunday, June 2, 2013

எல்லா ஊழலுக்கும் நேர்ந்ததே

மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி இன்றைய தினகரன் நாளிதழின் இணைப்பில் தன் கணவர் குறித்து எழுதியுள்ளார். சுதந்திரமான குடும்பத்திலே பிறந்த தான் எப்படி சுஜாதாவின் கட்டுப் பாட்டிற்குள் இருந்தேன் என்றும். பல முறை தன் தாயின் மடியில் தலை வைத்து அழுது அவர்கள் வீட்டிற்கே வந்து விடுகின்றேன் என்று பல முறை தன் தாயிடம் அழுததையும் வேறு வழியின்றி அந்த வாழ்க்கைக்குப் பழகிப் போனதையும் தன் மீதும் தன் குழந்தைகள் மீதும் அன்பிருந்தும்  அதை வெளிப்படுத்தத் தெரியாதவராகத் தன் கணவர் இருந்ததைப் புரிந்து கொண்டதாயும் சொல்லியுள்ளார்.


கொஞ்சம் இதனைப் புரிந்து கொள்ள் இன்றைய தலைமுறையினர் முயன்றால் விவாகரத்து வழக்குகள் குறையக் கூடும்.

                                           ====================

ஐ.பி.எல். தலைவர் சுக்லா பதவியைத் துறந்துள்ளார். ஐ.சி.சியிலும் செயலரும் பொருளாளரும் பதவியைத் துறந்துள்ளனர். சீனிவாசன் துறக்கத் தயாராயில்லை.

கிரிக்கெட் விளையாட்டில் சிரந்தவர்களாக் விளங்கிய கபில் தேவ்  சுனில் கவாஸ்கர். வெங்சர்க்கார் பிஷன்சிங் பேடி சித்து என்று பல விளையாட்டு வீரர்கள் இருக்கும் போது இந்தத் தொழிலதிபர்கள் ஏன் அதில் பதவிகளில் அம்ருகின்றனர்.. பவார் பருக் அப்துல்லா அருன் ஜேட்லி லாலு.புரியவில்லை.
இந்த ஊழல் என்னவாகும் என்கின்ற இளைஞர்களுக்கு.எல்லா ஊழல்களுக்கும் என்ன நேருமோ அதுவே இந்த ஊழலுக்கும் நேரும்.கவலை வேண்டாம்.

2ஜி யில் கடைசி வரை மாறன் சகோதரர்கள் கைது செய்யப் படாததற்கு என்ன காரணம் என்று யாராவது சொலுங்களேன். அவர்கள் விமானக் கம்பெனி சிறப்பாக புதிய புதிய விமானங்களைப் பறக்க விடுகின்றது. சீனிவாசன் தயவில் அவர்களும் சன்ரைசர்ஸ் அணியைக் களமிறக்கினார்கள்.

சட்டங்களுக்கு கட்டுப் படாத தலைவர்களும் அரசு அதிகாரிகளும் தொழிலதிபர்களும் இருக்கும் நாட்டில் பைத்தியம் போல் சட்டத்திற்குக் கட்டுப்பட்டும் பயந்தும் கடவுளுக்கு அஞ்சியும் வாழும் மக்களின் மத்தியில் அதிகக் கோபம் அடைந்தவன் துப்பாக்கியைத் தூக்குகின்றான்.

அவனைத் தீவிரவாதி என்கின்றனர்.

கொடுமை கண்டு பொங்குவாய் வா வா வா என்கின்றான் பெரும்புலவன் பாரதி..

கவலை எதற்கு அவனுக்கும்தான் சிலை நாடாளுமன்றத்திற்குள் வைத்து விட்டோமே,

1 மறுமொழிகள்:

Anonymous said...

உண்மைதான். இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை.
வாரியம் என்றாலே இப்பொழுதெல்லாம் வாந்தி வந்துவிடும்போலிருக்கிறது.