Monday, August 3, 2009

கொடுமை இது

எப்போதும் எல்லோர்க்கும் அன்பு செய்தல்
என்பதொன்றே தமிழ் எனக்குத் தந்த வழி
தப்பாக அதற்கென்று நாளைத் தேர்ந்து
தனியாக வைப்பதிலே பெருமை இல்லை
முப்போதும் எப்போதும் முறைகளிலே
முந்தி நிற்றல் தமிழர்கள் தம் பெருமை அய்யா
எப்போதும் நண்பர் என்பார் இதயத்துள்ளார்
இதற்கென்று தனி நாளா கொடுமை இது

4 மறுமொழிகள்:

said...

ஐயா
தங்களின் வலைப்பூவை இன்றுதான் பார்த்தேன்(நன்றி அகரம்.அமுதா)முழுவதும படித்தேன் மகிழ்ந்தேன்
இன்று வரை எனக்கு தெரியாததை நினைத்து நொந்து போனேன்
மிக மிக சிறப்பான வலைப்பூ ஐயா.
இனிவரும் பதிவுகளை தொடர்ந்து படித்து பயனடைவேன்.
மிக்க நன்றி ஐயா. பயணத்தில் சந்திப்போம்

said...

எல்லாம் காலத்தின் கோலம் ஐயா.

said...

நண்பருக்கும் தந்தைக்கும் தாய்க்கும் காதலிக்குமாய் தனித்தனி நாட்களில்தான் அன்பைச் செலுத்த வேண்டுமா?
கொடுமைதான் ஐயா.
எல்லா நாட்களிலும் எல்லோருடனும் அன்பாய் இருக்க முயற்சிக்கலாமே.

said...

நல்லா சொன்னீங்க.....