Thursday, April 8, 2010

ஊதியமும் வாங்கிடுவாராம்

வேலூரில் மக்களது எழுச்சி கண்டு
மேனியெலாம் சிலிர்க்கிறது வாழ்த்துகின்றேன்
ஊர் ஊராய் மக்கள் விழித்தெழுந்து விட்டால்
ஒவ்வொன்றாய் நேர்மை நன்மை எல்லாம் வரும்
சீரின்றி மருத்துவர்கள் சில பேர் அங்கு
செய்த செயல் கண்டு மக்கள் கொதித் தெழுந்தார்
ஊர் கூடி தொடர் வண்டி நிலையம் தன்னில்
ஒற்றுமையைக் காட்டியதில் வென்றார் மக்கள்


அரசுப் பணி மருத்துவர்கள் சில பேர் தினம்
அப்படியே சென்னை விட்டு வந்திறங்கி
விரைவாக அடுத்த வண்டி தனிலே சென்னை
விரைவாராம் ஊதியமும் வாங்கிடுவாராம்
நிலை கண்ட மக்கள் முடிவெடுத்தார் அங்கே
நிறுத்தி அவர் தமைப் பிடித்தார் நிலையம் தன்னில்
கொலைகாரர் கூட்டமதை காவலர் வசம்
கொண்டு வந்து சேர்த்து இன்று வென்று நின்றார்

0 மறுமொழிகள்: