Wednesday, April 21, 2010

பாரதிதாசன் நினைவு

பாரதியின் தமிழுக்குத் தாசனானான்
பாட்டு வெடிப் பாட்டளித்த பாட்டனானான்
ஊரறிய உண்மைகளைச் சொல்லி நின்றான்
உலுத்தர்களைப் பாட்டடியால் உலுக்கி நின்றான்
கார் மழையாய்ப் பொழிந்து நின்றான் தமிழாம் தாயை
காத்து நிற்க தமிழருக்கு உணர்வு தந்தான்
யார் உணர்ந்தார் அவன் உணர்வை மறந்தார் அந்தோ
எங்கேயும் ஆங்கிலம் தான் தமிழைக் காணோம்

0 மறுமொழிகள்: