Wednesday, May 6, 2009

மகிழ்வே என்றும்

வாழ்வதற்குப் பணம் தேவை என்றல் விட்டு
வாழ்க்கை அதே பணத்திற்கு என்று வாழும்
கோழைகளின் வாழ்வினிலே இன்பம் இல்லை
குறள் இல்லை தமிழ் இல்லை எதுவும் இல்லை
நாளையல்ல இன்று கூட சொந்தம் இல்லை
நாயகனின் கையில் என்று இனிய தமிழ்
வேளை தோறும் சொல்கிறது புரிந்து கொண்டால்
வேதனைகள் சேராது மகிழ்வே என்றும்

0 மறுமொழிகள்: