Thursday, May 7, 2009

வாழ்வைக் கொல்ல

யாருக்கும் வெட்கமில்லை என் றுரைத்தார்
எழிற் கவியாம் பாரதியின் தாசனாரும்
ஊருக்கு ஊர் இன்று வெட்கமில்லார்
ஊர்வலங்கள் வருகின்றார் தலைவராகி
நீருக்குள் இருக்கின்ற முதலை கூட
நீங்களாக மாட்டினால் தான் உம்மைக் கொல்லும்
ஊருக்குள் வருகின்றார் உம்மைக் கொல்ல
உண்மை கொல்ல எதிர் கால வாழ்வைக் கொல்ல

0 மறுமொழிகள்: