Sunday, May 10, 2009

வீரர் இல்லை

கொல்லப்படுவோம் என்று உணர்ந்தும்
கொஞ்சம் கூட அஞ்சா வீரர்
வெல்லல் என்பது அன்பால் என்று
வீரம் அதனைக் காத்தும் நின்றோர்
கல்லாய் இன்றிக் கனியாய் இருந்த
காந்தி எனும் அந்த வீர மகன்தான்
எல்லாருக்கும் தந்தை ஆனால்
எவரும் இங்கே வீரர் இல்லை

0 மறுமொழிகள்: