Saturday, December 5, 2009

வள்ளுவரும் விவேகாநந்தரும்

உயிரோடு இருப்பாரை சவக் கிடங்கில்
உள்ளாராய்க் காணுகின்றார் வள்ளுவரும்
துயர் தீர்த்து அடுத்தவர்க்கு உதவி செய்யும்
தூய மனம் இல்லாரை செல்வம் சேர்த்து
அயராமல் அப்பணத்தைக் காத்து நிற்கும்
அன்பில்லா மனிதர்களை சவங்கள் என்றார்
உயர்வான இக் கருத்தை விவேகாநந்தரும்
உரைக்கின்றார் சுய நலமே மரணம் என்று

0 மறுமொழிகள்: