Tuesday, December 29, 2009

பேசுதற்கும் ஏசுதற்கும்

வாரிசுகள் வருகின்றார் அரசியலில்
வந்தவுடன் பதவிகளில் அமருகின்றார்
ஊரிசைய பலகாலம் உழைத்தவரோ
ஒரத்தில் நிற்கின்றார் அந்தோ பாவம்
நேரிடையாய் ஒரு கேள்வி அவரிடத்தில்
நெஞ்சிருந்தால் இப் பதவி ஏற்பீரோ நீர்
ஊரறிய பட்டங்கள் பெற்று உள்ளீர்
உயர் கல்வி உமக்கிதனை உணர்த்தலையோ


உழைத்தழிந்து போனவரின் உடைமையினை
ஊரறியத் திருடுகின்றீர் உள்ளமற்றீர்
பிழைக்கின்ற கல்வியினைப் பெற்று உள்ளீர்
பேரறிவுக் கல்வியினைப் பெற்றிருந்தால்
இழைப்பீரோ இக் கொடுமை நாணி நிற்பீர்
ஏற்பீரோ பொறுப்பை யெல்லாம் வெட்கம் கொள்வீர்
பிழைப்பு இந்தப் பிழைப்பு உம்மை உலகம் எல்லாம்
பேசுதற்கும் ஏசுதற்கும் வழிகள் செய்யும்

0 மறுமொழிகள்: