Thursday, December 31, 2009

நமது நாட்டில்

சிறு பெண்ணைக் கற்பழித்த காரணத்தால்
சிறு தண்டனை அளித்த நீதிபதி
பெருங் காவலராய் இருந்த ரத்தோர் என்னும்
பீடையினைக் கொல்வதன்றி வழக்கு ஏனோ?
சரியான தண்டனையை அளிக்கா அந்த
சரித்திரத்து நீதிபதி தன்னைச் சேர்த்து
உரிக்காமல் விடுவதுவே கயவர்க்கெல்லாம்
உற்சாகம் தருகிறது நமது நாட்டில்

4 மறுமொழிகள்:

said...

நம்மால் கோபம் மட்டுமே பட முடியும். வேறு என்ன செய்வது?

said...

வணக்கம் ஐயா கவிதை நறுக்கு தெறித்தாற் போல உள்ளது.

said...

புத்தாண்டு வாழ்த்துக்கள். ,தமிழர்,தமிழ் உள்ளவரை மிக நீண்ட காலம்தமிழ்சேவைபுரிந்துஅழியாப் புகழ் தமிழுடன் பெறுவீராக

said...

2010 புத்தாண்டு வாழ்த்துக்கள். நெடுங்காலம் தமிழ்,தமிழர்,உள்ளவரை தமிழுடன் கலந்து அழியாப்புகழ் பெறுவீராக