Friday, January 1, 2010

நற்றமிழை உண்டதாலே

விருதுகளைத் தேடி எங்கும் அலைகின்றார் காண்
வீழ்கின்றார் கால்களிலே நாணம் விட்டு
எருதுகளைப் போல் அந்த விருதுகளை
எப்போதும் சுமக்கின்றார் காட்டுகின் றார்
சரிதம் அந்த விருதுகளை ஏற்பதில்லை
சரியற்ற விருதுகள் என்று ணர்வதாலே
எரி தழலும் ஏற்பதில்லை இவர் விருதை
எண்ணற்ற நற்றமிழை உண்டதாலே

0 மறுமொழிகள்: