Sunday, January 17, 2010

வெற்றி வெற்றி

எழுதியது அனைத்தையுமே நூல்களாக்கி
ஏற்றிடலாம் நூலகங்கள் அனைத்திற்குள்ளும்
பழுதின்றி ஆட்சியாளர் தனைப் புகழ்ந்து
பதம் பணிந்து அவர்க்காகும் தொண்டு செய்து
தொழுவதிலே புது விதங்கள் கண்டு போற்றி
தூய்மை வாய்மை நேர்மையெல்லாம் தூக்கி வீசி
அழுவதுவும் சிரிப்பதுவும் கூட இங்கு
அவர் சொல்லச் செய்தாலே வெற்றி வெற்றி

1 மறுமொழிகள்:

said...

ஹஹ்..ஹஹ்.ஹா...!!!!
அருமை ..!! ஐயா..!! அருமை..!!

கால்பிடித்துக் கறுப்பான
பறவைபிடித்து..!!
நாளெல்லாம் போற்றினாலே
தனம் வளரும்..!! அன்றி..!!
தமிழ்வளர்வதேது என்று
சதிராடுந்தமிழாலே
உரைத்துவைத்தீர்..!! இந்நாளில்
உண்மை..மிக்க..உண்மையிது..!!ஐயா.>!!