Wednesday, January 20, 2010

பட்டுக்குருக்கள்

பட்டுக் குருக்கள் அவர் பரமனின் இனிய தொண்டர்
கட்டுக் குலையா மேனி கண்களில் கருணை வெள்ளம்
தொட்டுக் கொடுத்ததெல்லாம் துலங்கிடும் உயரும் வெல்லும்
தூய்மையாம் உள்ளம் தன்னால் தூயன ஒன்றே சொல்லும்
கெட்டவர் தம்மைக் கூடக் கேளிராய்க் கொண்டு வாழ்ந்தார்
கீழோர் மேலோர் என்றே கிழித்தவர் பார்த்ததில்லை
பட்டது தளிர்க்க வைக்கும் பண்புள்ள நல்ல வார்த்தை
பரமனின் விருப்பம் அவரைத் தம் பக்கம் அழைத்துக் கொண்டான்

0 மறுமொழிகள்: