Tuesday, January 5, 2010

காரணம் தான் என்?

ஓழுங்கீனம் அனைத்தையுமே ஓழுக்கமாக்கி
உயர் பதவி தனில் வந்தோர் மகிழுகின்றார்
புழுங்கி மனம் நொந்தாலும் வாய் திறந்து
புத்தியுள்ளோர் சாடுதற்கு அஞ்சுகின்றார்
கலங்கி இங்கு நல்லவரும் ஏழையரும்
கடவுளிடம் வேண்டி வேண்டி மாளுகின்றார்
விளங்கி நிற்கும் இயேசு அல்லா சிவன் பெருமாள்
விரைவாக இவர் முடிக்காக் காரணம் தான் என்?

0 மறுமொழிகள்: