Tuesday, January 26, 2010

குடி அரசு தின வணக்கம்

கோட்டையிலே குடியரசுத் தலைவர் இன்று
கூண்டுக்குள்ளே நின்று கொண்டு கொடியேற்றுவார்
நாட்டில் உள்ள ஏழைகளோ வறுமைத் துன்பம்
நாளையும் தான் கொல்லுமென்றே துடி துடிப்பார்
வீட்டிற்காய்க் கோடிகளைச் சேர்த்து வாழும்
வெற்றுரையின் தலைவர்களோ வாய் வீசுவார்
பாட்டன் காந்தி வழியினிலே சென்றுயர்ந்த
பைத்தியங்கள் அனைவரையும் வணங்கி நிற்போம்

0 மறுமொழிகள்: