Sunday, January 3, 2010

ஆடும் பிள்ளை

விருது பெறா வள்ளுவர்தான் இன்றும் இங்கு
வீற்றுள்ளார் அரியணையில் இராமனது
சரிதை தந்த கம்பன்தான் சோழனையே
சரியாக வினாவெழுப்பி விலகிச் சென்றான்
அரிதான பெண்ணொருத்தி பாண்டி நாட்டை
அனலுக்குத் தந்த கதை தந்த அடிகள்
விருதாலே வாழ்ந்தவரா இல்லை இல்லை
வியன் அறிவால் நேர்மையினால் வாழுகின்றார்


விருதுக்குச் சண்டையிடும் விருதாக்களும்
விருதளிக்கும் குழு சேர்ந்த படவாக்களும்
அரிதான விருதளித்தாற் போல இங்கு
ஆட்சியிலே அமர்ந்திருக்கும் தெருவாட்களும்
உரிதானோர் பார்வையிலே உயர்ந்தார் இல்லை
ஒரு நாளும் இவர் திருந்த முயன்றாரில்லை
கருதாமல் தங்கடமை ஆற்றி நிற்பார்
கனித் தமிழாள் மடியினிலே ஆடும் பிள்ளை

0 மறுமொழிகள்: