Sunday, January 17, 2010

மயங்கி நின்றார்

மக்களுக்காய் உழைக்க வந்த அனைவருக்கும்
மாசச் சம்பளமெல்லாம் கூட்டியாச்சு
மக்களிடம் கேட்காமல் அவர்களாவே
மனசு கொண்டு கூட்டிக் கொண்டார் வாழ்க அவர்
சொக்கனுக்கும் சுப்பனுக்கும் சம்பளத்தை
சுளையாகக் கொடுப்பதொரு நாளுமில்லை
மக்கள் என்ன மக்கள் இவர் இடைத் தேர்தலில்
மன்னர் தரும் அன்பளிப்பில் மயங்கி நின்றார்

0 மறுமொழிகள்: