Saturday, January 2, 2010

சொன்னான் பாரதியும்

ஆங்கிலேயர் புத்தாண்டைநம்மவர்கள்
ஆர்வமுடன் மிகச் சிறப்பாய்ப் போற்றுகின்றார்
பூங்குவளை மலரோடு கோயில்களில்
போய் நின்று நள்ளிரவில் வணங்குகின்றார்
தேங்கி விட்ட ஆங்கிலேயன் பழக்கமதில்
திளைத்து இங்கு ஆகமங்கள் மறக்கின்றார் காண்
ஒங்கி அன்றே அடிமையிவர் மோகமது
ஒழியாது என்று சொன்னான் பாரதியும்

0 மறுமொழிகள்: