Sunday, January 3, 2010

தமிழன் எக்ஸ்பிரஸ் சிவா ஒருமுறை சிவாஜிக்கு விருது வழங்காதது குறித்துத்
தொலைபேசியில் கேட்ட போது சொன்ன கவிதை


பல்கலைக் கழகமாய்
வந்து நின்றான்

நடிப்புக் கல்லூரிகள்
பின்னரே
தோன்றின

அவனுக்கு
விருது
வழங்காததால்
குடியரசுத் தலைவர்
மாளிகை

ஒரு
சிங்க நடையைத்
தரிசிக்கும்
வாய்ப்பை
இழந்தது

தேசத்திற்கே
விருதாய்
வந்தவனுக்கு

தேசம்
எப்படி
விருதளிக்க
முடியும்

அவன்
போட்ட
பிச்சையிலே தான்
பலர்
இன்று
கோடீஸ்வரர்

0 மறுமொழிகள்: