Monday, January 25, 2010

எனது பிறந்த நாள் 30-01-2010

தைப் பூசத் திருநாளில் பிறந்தேன் நானும்
தட தடவென் றோடுகிறது நாட்கள் கண்டேன்
இப் பூசம் அறுபத்து ஐந்து ஆகும்
இருக்கின்றேன் இன்னும் நான் இறையருளால்
மை பூசவில்லை இன்னும் தலையில் நானும்
மனத்திற்கு வயசின்னும் ஆகவில்லை
கைப் பிடித்துத் தமிழன்னை இன்னும் என்னை
கண்மணியாய்க் காக்கின்றாள் வணங்கி நின்றேன்

4 மறுமொழிகள்:

said...

ஆஹா..... 'தலைமை' இல்லையா!!!!

மனையாளின் அருமை, இங்கேதான் புரியும்!

பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாழ்த்துகள்

said...

அண்ணாச்சி நெல்லை கண்ணன் அவர்களுக்கு ,தேசியமும் தமிழும் இரு கண்ணென வாழும் இந்த பெங்களுரு தமிழனின் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.விஜயன்.

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!