Tuesday, January 26, 2010

மன்னராட்சி வந்திடாதோ

மகனைத் தேர்க் காலில் இட்டான் சோழன் அவன்
மங்கையின் முன் உயிர் துறந்தான் பாண்டியனும்
புகல வொண்ணாத் தவறதனால் கையைத் தானே
போக்கி நின்றான் பொற் கையின் பாண்டியனும்
தகதகக்கும் தலை கொடுத்தான் குமணனுமே
தமிழ் கேட்க தனைத் தந்தான் நந்தி வர்மன்
புகழோடு தவறுக்கும் கொடைக்கும் தம்மைப்
போக்கிக் கொண்ட மன்னராட்சி வந்திடாதோ

0 மறுமொழிகள்: