Friday, December 11, 2009

ஆடுகின்றார்

பாரதிஎன் றொருகவிஞன் பிறந்தான் இன்று
பழந்தமிழைப் புதுத் தமிழாய்ப் புதுக்குதற்கு
ஊரதிரப் பெண்களுக்காய்க் குரல் கொடுத்தான்
ஊத்தைக் கற்பெனும் அந்தப் பெயரொழித் தான்
நீரறிவீர் தமிழை அவன் தந்தது போல்
நிலவுலகில் தந்தவர்கள் யாரும் இல்லை
யாரறிவார் இன்று இந்தத் தமிழுலகில்
யார் யாரோ ஆடுகின்றார் கவிஞர் என்று

1 மறுமொழிகள்:

said...

மிக்க நன்றிகள்..!!
உண்மைதான் ஐயா..!!!!
பாரதியின் கவிவரிகள் படிக்காமலேயே
பாரதத்தின் கவியென்று பகர்கின்றார்..!!
இங்குள்ளோர்..!!
இந்த நிலை மாற வேன்டும்...!!!
அருமை..!!