Tuesday, January 11, 2011

திருப்பூர் குமரன் நினைவு நாள்

தடியடியால் தான் வீழ்ந்த போதும் கையில்
தாங்கி நின்ற மணிக் கொடியைக் காத்த வீரன்
அடியிடியாய் வீழ்ந்த போதும் அன்னையவள்
அழகு மிக்க கொடியினையே காத்த தீரன்
கொடி காத்த குமரன் என்ற பெயரைக் கேட்டால்
கோட்டைகளின் கொடியெல்லாம் வணக்கம்சொல்லும்
கோடிகளில் கொள்ளைகளைச் செய்வார் கையில்
கொடியேற்றம் போய்ச் சேர்ந்த கொடுமை என்ன

0 மறுமொழிகள்: