Thursday, January 20, 2011

பிறந்த நாள் வேண்டுதல்

தந்தையாய்த் தாயாய் என்னைத் தழுவியே கொண்ட தேவே
எந்தையைத் தாயைத் தமிழாய் எனக்கென ஈந்த அய்யா
முந்தைய வினைகள் இன்றி முழுவதும் நன்மை தந்தாய்
வந்தனம் உனக்குச் சொல்லி வாழ்கின்றேன் இன்றும் நன்றாய்
எந்தனுக் குறவாய் நல்ல இனியர்கள் பலரைத் தந்தாய்
எழுதிட முயல வைத்தாய் இனிய நற்றமிழைத் தந்தாய்
மைந்தன் நான் வேண்டி நிற்றல் மன மொழி மெய்யினாலே
மணக்கின்ற தமிழைப் பேச மக்களுக் குணர்த்து வாயே

0 மறுமொழிகள்: