Tuesday, October 20, 2009

திருவடி கிடந்தேன்

ஆறுதல் தேடி வருபவர் தமக்கு
ஆறுதல் தருவதில் மகிழ்ந்தேன்
அழுகையில் விழுந்து அரற்றுவார் தமக்கு
அழுகையின் மகத்துவம் உரைத்தேன்
தேறுதல் தேடி வருபவர் தமக்குத்
தேறுதல் தருவதில் தெளிந்தேன்
திசைகளைத் தேடியே திணறுவார் தமக்குத்
திசைகளை உணர்த்தியே உணர்ந்தேன்
மாறிடும் உலகினில் நல்லன எல்லாம்
மற்றவர்க்கு உரைத்திடப் படைத்தான்
மனமெலாம் உறையும் எனதருங் கடவுள்
மகிழ்ந்தவன் திருவடி கிடந்தேன்

Saturday, October 17, 2009

தீபாவளித்திருநாள் 4

அதிகார
வர்க்கத்தை
ஆட்சியாளர்களை
அடிமைகள்
வணங்கும்
நாள்

தீபாவளித்திருநாள் 3

ஏழையர்க்குத்
தேம்பும்
வலித்
திருநாள்

தீபாவளித் திருநாள் 2

கார்ப்போரேசன்
குழாயும்
கங்கையாகும்
நன்னாள்

தீபாவளித் திருநாள்

ஆண் குழந்தை
என்பதால்
கள்ளிப் பால்
கொடுக்காமல்
வளர்த்து
அரக்கனாக்கி
தந்தை
உதவியுடன்
தாய்
கொன்ற
நாள்

Friday, October 16, 2009

வெடிக்குமோ

வெடி
செய்யும்
குழந்தைகள்

வெடிப்பது
தொழிற் சாலை
வெடித்தால்
தான்

தீபாவளி

முன்னும்
கவலை

பின்னும்
கவலை

நடுவில்
ஒரு
நாள்

தீபாவளி


வா மீத முலைநூலில் இருந்து