Thursday, December 20, 2012

வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மாணவி ஒருவருக்கு  நடந்துள்ள கொடுமை பற்றி மத்திய அமைச்சராக இருக்கின்ற தமிழக பெண் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் எந்தக் கருத்தும் சொன்னதாகத் தகவல் இல்லை மேற்கு வங்க முதல்வரும் தமிழக முதல்வரும் பெண்கள். அவர்களும் வாய் திறக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் சட்டப் பேரவை உறுப்பினர்களாகவும் இருக்கின்ற பெண்மணிகள் நாட்டில் நிறைய பேர் உண்டு. அவர்களும் கருத்துத் தெரிவித்ததாகத் தகவல் இல்லை. குறைந்த பட்சம் அவர்கள் இதைக் கண்டித்துப் பதவி விலகுவதாக சும்மா ஒரு வார்த்தைக்காகவேனும் கூறுவார்கள் என எதிர்பார்த்தேன்.

ஷீலா தீட்ஷீத் பதவி விலகியிருக்க வேண்டும். இல்லை.

மருத்துவமனையில் அந்தப் பெண் வாழ விரும்புவதாக் ம்ருத்துவர்கள் சொல்லுகின்றனர்.

என்ன செய்ய நான் மேலே சொன்ன எல்லோரும் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

Wednesday, December 19, 2012

இவை தொடரும்

இந்தியத் தலை நகரத்தில்  நண்பரோடு பேருந்தில் இரவில் பயணம் செய்த மாணவி ஒருவர் ஆறு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டுள்ளார்.
கேரளாவில் தந்தையும் உடன்பிறந்தவனுமே தங்கள் வீட்டுப் பெண்ணைக் தொடர்ந்து  கற்பழித்து வந்துள்ளனர். எதிர்த்த வீட்டு அயோக்கியன் ஒருவன் தன் சின்னஞ்சிறு மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் என்று அவனைக் கொல்லாமல் தன் மகளை ஒரு தந்தை கொன்றிருக்கின்றான்.

உலகத்திற்கே  வழி காட்டுகின்ற ஞானியர் பலர் தோன்றிய நாடு.

பாரத நாடு பழம் பெரும் நாடு
நீரதன் புதல்வர் இந்
நினைவகற்றாதீர் என்றான் பாரதி.

ஒழுக்கம் சொல்லித் தரப்படாத காவற்றுறை.எல்லாவற்றிற்குள்ளும் சாதீய வெறியுணர்வு.  காவற்றுறைக் குள்ளே இருக்கின்ற பெரும்பான்மை சாதீயினர் அவர்கள் சாதிக் குற்றவாளிகளைக் காப்பாற்றச்செய்கின்ற அக்கிரமங்கள்.
செவிலியர் வேலை ஆசிரியை வேலைக்கு சிபாரிசு தேடி வரும் பெண்களை
வீழ்த்தும்  சட்டப் பேரவை உறுப்பினர்கள் நாடாளும்ன்ற உறுப்பினர்கள். விமானப் பணிப் பெண்ணிடம் சில்மிஷம் செய்யும் அமைச்சர் பெருமக்கள்.
தன் வீட்டுப் பெண்களைத் தவிர மற்ற பெண்களுக்கு பொய்யான விடுதலையைப் போதிக்கும் படைப்பாளிகள்.

சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் இந்தக் குற்றவாளிகளைத் தூக்கில் போட வேண்டும் என்கின்றார். உடனே  மரண தண்டனையை எதிர்க்கும் மனிதநேய பிரமுகர்கள் என்ற போர்வையில் சில பெரிய சிந்தனையாளர்கள் கருத்துப் பரிமாற்றம்  தொலைக் காட்சிகளில். தொடங்கி விடும்.

தமிழ்நாட்டில் இருக்கின்ற மனித நேயப் பிரமுகர்கள் பலர் ஒரு ஏழைத் தமிழன்
ம்துரை ஆதீனமடத்தில் அன்னதானம் சாப்பிடப் போனவனை நித்தியானந்தா
வின் சீடர்கள் பலமுறை காலால் உதை உதை என்று உதைத்ததை பல தொலைக்காட்சிகள் பல முறை காட்டியும் அது குறித்து எந்த வித வருத்தமும் கண்டனமும் தெரிவிக்காத போது தான்  அவர்களை அடையாளம் கண்டு கொண்டனர்.

இன்னும் ஒரு வாரம் இது குறித்து இந்தச் சிந்தனையாளர்கள் எல்லோரும் ஆங்கிலத்திலும் பின்னர் அவரவர் மொழிகளிலும் கண்டனக் குரல்களை
பல் வேறு ஆய்வறிக்கைக்ளோடு மக்கள் முன் வைப்பார்கள்.

கடுமையான தண்டனை தர வேண்டும் என்பதில் எல்லொரும் ஒருமித்த குரலில் கூப்பாடு போடுவார்கள். எல்லாம்  பம்மாத்து என்பது இன்னும் ஒரு வாரத்தில் மக்களுக்குத் தெரிந்து விடும். சாதி வெறியையும் மத வெறியையும் தூண்டி விட்டுப் பிழைக்கின்ற அரசியல் ஒழிகின்ற வரை இந்தக் கொடுமைகள்
தொடரும் .

Thursday, December 13, 2012

என்ன செய்வது

உயர்நீதி மன்றம் ஒரு சரியான தீர்ப்பை வழங்கி உள்ளது. பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை கல்லூரியில் இருந்து விலக்க வேண்டும் என்று. நமது அரசியல் தலைவர்கள் உடனே மாணவர்களின் நண்பர்களாகி  பேயர் சூடிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுத் தொலைப்
பார்களே என்ன செய்வது.

ஆட்டோவில் ஆறு சிறுவர்களுக்கு மேல் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லக் கூடாது என்று காவற்றறை கட்டளையிட்டால் உடனே ஆட்டோ ஒட்டுநர்கள் வயிற்றில் அடிக்காதே என்று சத்தமிடுவார்கள். ஆட்டோ ஒட்டுநர் தொழிற்சங்கங்கள் அனைத்தும் . விபத்தில் இறந்து போகின்றவர்கள் குழந்தைகள் என்று வருத்தமே இல்லாமல். தலைவர்கள் வீடுகளிலும் குழந்தைகள் உள்ளன.

சில உத்தரவுகளைப் போடுவதற்கு தேர்தல் நினைவில்லாத தலைமைகள் வேண்டும்.
பெற்றோர்களுக்கும் இதைப் பற்றிக் கவலையில்லை என்ன செய்வது

Tuesday, December 11, 2012

பாரதி தான் சொல்வான்

கோயிற் பூசை செய்வோன் சிலையை
கொண்டு விற்றல் போலும்
வாயிற் காத்து நிற்போன் வீட்டை
வைத்திழத்தல் போலும்
ஆயிரங்களாய நீதி
அவை உணர்ந்த தருமன்
தேயம் வைத்திழந்தான் சீச்சீ
சிறியர் செய்கை செய்தான்

அந்நிய முதலீடு குறித்துப் பாரதி சொல்வது போலவே தொன்றுகின்றதே.
ஒரு வரிதான் உதைக்கின்றது மன்மோகன் சிங் தருமனாக முடியாது.

தமிழ் மக்கள் மின் தட்டுப் பாடில் தவித்து துன்புற்றிருக்கும் போது அமைச்சரவைப் பெரியவர்கள் அனைவரும் தட்டுப்பாடு இல்லாமல் அதில் துன்புறும் மக்கள் குறித்துத் துன்புறாமல் வெட்கமில்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பது குறித்தும் அடுத்த வரிகளில் கூறுகின்றான்.

நாட்டு மக்களெல்லாம் தம் போல்
நரர்கள் என்று கருதார்
ஆட்டு மந்தையாமென்று உலகை
அரசர் எண்ணி விட்டார்.

அவன் தான் பாரதி

அன்பு அத்தைக்காக

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் திரைப் படத்தில் அம்மா என்றால் அன்பு என்று பாடல் பாடி தமிழக மக்கள் மத்தியில் அது பிரபலமானது.

நேற்று பங்குத் தந்தை சின்னப்பா முன்னர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் அன்பின் பெருமையை புகழ்ந்திருக்கின்றார்.

தன்னிடம் சிறந்த நற்குணங்கள் ந்ற் பண்புகள் வந்ததிற்கு தான் கல்வி கற்ற கிறிஸ்தவ மதப் பள்ளிகளே காரணம் என்றும் சொல்லியிருக்கின்றார். மிகுந்த மகிழ்ச்சி.

அண்ணன் மகள் அத்தனை ஆசையோடு அத்தை அவர்கள் வருவார்கள் என்று காத்திருந்த அந்த மணவிழாவிற்குப் போயிருந்தால் தகப்பனற்ற அந்தப் பெண் எத்தனை மகிழ்ந்திருப்பார்.

Wednesday, December 5, 2012

யாருக்கும் வெட்கமில்லை

தமிழ்நாடு இருளில் தவிக்கின்றது. அரசோ எந்த விதக் கவலையும் கொள்வதாகத் தெரியவில்லை. விழாக்களும் கோலாகலங்களும் நடத்தவும் வெட்கமுறவில்லை.

அண்டை மாநிலங்களில் மின் வெட்டு இல்லை. எதையாவது எதிர்த் தரப்பினர் சொன்னால் அது குஜராத்தில் இருக்கின்றது  உத்தரப் பிரதேசத்தில் இருக்கின்றது என்று பெரியவர் கருணாநிதி அரசுப் பொறுப்பில் இருக்கையில் பதில் சொல்வார். நான் அப்போதெல்லாம் அவரை மேடைகள் வாயிலாகக் கேட்டிருகின்றேன். நீங்கள் தான் எங்களின் முதல்வர். நாங்கள் உங்களிடம் தான் கேட்போம். நீங்கள் அதற்கு வேற்று மாநிலங்களைக் காட்டுவது.
தன் தந்தையிடம் குழந்தைகள் ஏதேனும் கேட்டால் எதிர்த்த வீட்டுப் பிள்ளை
களின் தந்தை  அவர்களுக்கு வாங்கிக் கொடுத்தானா. பக்கத்து வீட்டுக்காரன் வாங்கிக் கொடுத்தனா என்றெல்லாம் பதில் தருவது பண்பாட்டுக் குறைவு என்றுஇந்த மாநிலத்தின் பொறுப்பிலே இருக்கின்ற நீங்கள் தான் எங்களுக்கு வேண்டியவற்றைச் செய்ய வேண்டும் என்று.

இன்று மின் வெட்டிலும் மைய அரசைக் குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம். தமிழ்நாடு அரசு முயல வேண்டும். முயல்வதாகவே தெரியவில்லை.
பாரதிதாசன் பாடல் வரிகள் தான் நினைவிற்கு வருகின்றது. வெட்கமில்லை வெட்கமில்லை இங்கு யாருக்கும் வெட்கமில்லை.தினமலர் நாளிதழ் ஒரு நிழற்படம் வெளியிட்டிருந்தது. சட்டப் பேரவை ஒளி வெள்ளத்தில்பக்கத்திலே
ஒரு செய்தி தமிழ்நாட்டில் மின் வெட்டு 16 ம்ணி நேரம் என்று.

தினமலர் இப்படிச் செய்திகளை வெளியிடுவதனால் அதற்கு அரசு விளம்பரம்
5 மாதங்களாகத் தரப் படுவதில்லை.

பத்திரிக்கைச் செய்திகளை மக்களின் குரலாக எடுத்துக் கொள்வது நேரு
காமராஜர் போன்றோரது காலம்.

Saturday, December 1, 2012

சிந்திப்பதற்குத் தான்

நேற்று இரண்டு கொலைக் குற்றம் சுமத்தப் பட்டவர்கள் காவற்றுறையினரால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். எதற்கென்றால் அப்போதுதானே அவர்களுக்குப் பின்னாலிருந்து தூண்டி விட்ட பெரிய மனிதர்கள் என்று அநியாயத்திற்கும் ஊர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற கொள்ளையர்
களும் அரசியல் அயோக்கியர்களையும் காப்பாற்ற முடியும். வீரப்பன் கொல்லப் பட்டதில் எத்தனை அரசியல்வாதிகள் பிழைத்தனர். குற்றவாளிகளை உருவாக்குவதே காவற்றுறையினர்தானே.


சட்டப் பேரவை வைர விழாவிற்கு திமுகவினர் போகவில்லை. சரிதானே.
சட்டப் பேரவையில் எதிர்க் கட்சித் தலைவராக இருந்த ஒரு பெண்ணை சேலையைப் பற்றி இழுத்து அடித்து உதைத்து முதல்வராக இருந்த பெரியவர் கருணாநிதி அவர்கள் ஒரு மிகவும் தரம் தாழ்ந்த வார்த்தையினை உச்சரித்ததனை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டதை மறந்திருக்க முடியுமா. வடக்கே எத்தனை கடுமையான விமரிசனங்களைச் செய்தாலும் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் பொது நிகழ்ச்சிகளில் பண்பாடு காக்கின்றனர். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய மூத்த குடி  அதற்கும் முந்திய குடிகளைப் போல் நடந்து கொள்கின்றனர். விஜயகாந்தை பாராட்ட வேண்டும். முதலில் ஜெயலலிதாவை அரசியல் தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று எத்தனைக் காலம் அடம் பிடித்தார் பெரியவர் கருணாநிதி.

அதற்காக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் செய்வதையெல்லாம் நான் நியாயப் படுத்துகின்றேன் என்று கருதாதீர்கள். எல்லாத் தலைவர்களின் மீதும் கூட்டங்களில் முதல்வரை அவதூறாகப் பேசியதாக வழக்குகள். மக்களாட்சி நடக்கின்ற நாட்டிலே இது எத்தனைப் பெரிய கொடுமை.

தி  மு க விற்கு ஆதரவாக பெரியவர் இராசாசி அவர்கள் பெரியவர் காமராசரை அந்தக் கருப்புக் காக்காயைக் கல்லால் அடியுங்கள் என்று சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் பேசினார். காமராசர் அவர்களை மேடையில் வைத்துக் கொண்டு நாகர்கோயில் மேடையிலே சின்ன அண்ணாமலை அவர்கள் இராசாசி என்று பேசத் துவங்கினார்.அவரது சட்டையைப் பிடித்து இழுத்த பெரியவர் காமராசர் நீ யாருன்னேன் அவரப் பேச அவர் யாரு இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்  அவர் சேவை என்ன தெரியுமா. நிறுத்துன்னேன் என்று அவரைப் பேவே விடாமல் தடுத்து விட்டார்.