Saturday, October 20, 2012

இறைவன் அருள்

நெல்லைக்கண்ணனா அப்படி ஒர் பெயரை நான் கேள்விப் பட்டதேயில்லை என்ற நித்தியானந்தன் மதுரை ஆதீனத்தில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளார். எல்லோறும் தொலைபேசியிலு அலை பேசியிலும் என்னை அழைத்துப் பாராட்டுகின்றனர்.

என்னை இந்தப் போராட்டதிற்குள் அழைத்தது என் அன்னை மீனாட்சி போகச் சொன்னது எனதன்னை காந்திமதி இது அவர்களின் அருள்.

இந்த வெற்றி முழுவதும் இறைவனின் அருளால் கிடைத்தது

Friday, October 19, 2012

ஆதித் தமிழ் சிறுவன் கெளதமை வெற்றி பெறச் செய்வோம்

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்வில் தமிழ்நாட்டின் ஒரே ஆளாக கெளதம் இறுதிச் சுற்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளான்.
அருணா சாயிராமால் பாராட்டப் பட்டவன் சுதா ரகுநாதனால் புகழப் பட்டவன்.உண்ணி கிருஷ்ணனால் உச்சி முகரப் பட்டவன் வீணை மேதை ராஜேஷ் வைத்யாவால் தூக்கி கொஞ்சப்பட்டவன்.கடம் மேதையினால் கெளரவிக்கப் பட்டவன். வயலின் கலைஞர் எத்தனையோ கச்சேரிகள் வாசித்த நான் முதன் முதலாக அழுதது இவன் பாடலைக் கேட்டுத்தான் என்று சொல்ல வைத்தவன். இந்த ஆதி தமிழ் சிறுவனுக்கு நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டுகின்றென். வாக்களிக்க  வேண்டிய எண் SSJ 10send it to 57827
online www,vijaytv.com

ஒருவரே 100 வாக்குகள் அனுப்பலாம்.வெல்லாட்டும் ஒடுக்கப் பட்ட இனத்தின் ஒரே பங்களிப்பாளன் கெள்தம். நன்றியுடன் நெல்லைக்கண்ணன்

Tuesday, October 16, 2012

காங்கிரஸின் உண்மைத் தொண்டன் மணி சங்கர அய்யர்

இன்னும் 45 வருடங்கள் ஆனாலும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வராது மணிசங்கர் அய்யர் அவர்கள் திருவாய் மலர்ந்தருளியிருக்கின்றார்.

ஆமாம் 5 வயதிலிருநதே காங்கிரஸ் கொடியைக் கையிலேந்தி படிப்பையெல்லாம் துறந்து விட்டு கட்சி வளர்த்த பெருமகன்..

இராஜீவ் காந்தியின் பள்ளித் தோழனாயிருந்த ஒரே காரணத்தினால் மயிலாடு
துறை நாடாளுமன்ற உறுப்பினராகி மத்திய அமைச்சரான இவரைப் போன்ற்
வர்களால்தானே காங்கிரஸ் ஒழிந்தது.

மயிலாடுதுறையிலே காங்கிரஸிற்காக உழைத்து உழைத்து ஒடாய்த் தேய்ந்த
வர்கள் இருக்க டில்லியிலிருந்து வந்தது மட்டுமல்ல.இவருக்கு எல்லாச் சேவைகளையும் செய்ததற்காகவே ராஜ்குமார் என்கின்றவர் சட்டப் பேரவை
உறுப்பினராக்கப் பட்டார்.

தமிழ்நாட்டின் எந்த ஊரையும் தொண்டனையும் தெரியாத ஜெயந்தி நடராஜன்
தொடர்ந்து மாநிலங்களவை  உறுப்பினராக மத்திய அமைச்சராக இருப்பார்.

பிறகு காங்கிரஸ் எப்படி வளரும் உழைப்புத் திருடர்களெல்லாம் உயரத்தில். இவர்களின் இன்னொரு திறமை திராவிட இயக்கங்களின் உழைப்பைத் திருடி
உயரத்தில் போய் தங்களைத் தலைவர்களாகக் காட்டிக் கொள்வது.

இந்த மணிசங்கர அய்யர் காங்கிரஸ் இடம் தரவில்லையென்று திரிணாமுல்
காங்கிரஸில் போய் இடம் கேட்டார். பிறகு மயிலாடுதுறையில் காங்கிரஸிற்
கெதிராகப் போட்டியிட்டார். இன்று காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினராக
உள்ளார்.

திராவிட இயக்கங்கள் மட்டும் தெளிவாகக் காங்கிரஸை ஆதரிக்காமல் இருந்தார்களென்றால் இன்றைய காங்கிரஸ் தலைவர்கள் பலரும் எங்கே
இருக்கின்றார்கள் என்றே தெரியாத நிலையில்தான் இருப்பார்கள்.

Monday, October 15, 2012

உணர்வில் தோன்றியவை

நேற்று ஒரு உணவகம் சென்றிருந்தேன்.
அறிவிப்புப் பலகை ஒன்று பார்த்தேன்

வாடிக்கையாளர்களே தங்கள் உடமைகளைத் தாங்களே பத்திரமாகப் பார்த்துக்
கொள்ள வேண்டும் தவறினால் நிர்வாகம் பொறுப்பல்ல

நமது அரசியல் கட்சிகள் நினைவுக்கு வந்தன

வாக்காளர்களே உங்கள் உடமைகளையும் நில புலன்களையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு .எங்கள் பெயரிலோ எங்கள்
உறவினர்கள் பெயரிலோ அவை மாறினால் நாங்கள் பொறுப்பல்ல. உங்கள் அறியாமையே பொறுப்பு என்று எழுதாத விளம்பரம் ஒன்றை நமக்கென தந்திருக்கின்றனரே.


பூரண மது விலக்கை அமுல் படுத்த வேண்டும் என்று சென்னையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாச் சூழல்.

தமிழக முதல்வர் மாண்பு மிகு முதல்வர் அவர்க ள்திமுக தலைவர் கருணாநிதி திறந்து வைத்த எல்லாவற்றையும் மூடுகின்றவர் இதை மூடினால் தாய்க் குலத்தின் பேராதரவோடு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கலாம்.அம்மா என்று தமிழக ஏழை எளிய மக்களால் அன்போடு அழைக்கப் படும் தாயவர் இதனைச் செய்ய வேண்டும். காந்தி காமராஜர் அண்ணா போன்றவர்க்ளின் ஆசியும் கிட்டும். இறைவனிடம் வேண்டி நிற்போம்.

Friday, October 5, 2012

செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலையம் தேவையில்லை என்று உதயகுமார் தலைமையில் மீனவ நண்பர்கள் 400 நாடகளுக்கும் மேலாகப் போராடுகின்
றனர். பல தலைவர்கள் அவர்களை ஆதரித்தும் போராட்டங்களிலே ஈடு
பட்டனர்.

வேண்டும் என்கின்ற காங்கிரஸ் நண்பர்கள் போராடத் துவங்கி விட்டார்கள். கூடங்குளத்திலா.சென்னையில் நாகர்கோவிலில் என்று பல இடங்களில். சமீபத்தில் நடந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் பல இலட்சம் பேர் வாக்களித்தனர். ஆனால் போராட்ட களத்திலோ சில நூறு பேர். எத்தனை காலம் தான் இவர்கள் இப்படி ஏமாற்றித் திரிவார்கள். நாடாளுமன்றத்
தேர்தலின் போது இப்படியெல்லாம் போராட்டங்கள் நடத்தியதாக விபரம்  காட்டினால்தானே இடம் பெறலாம்.

இலட்சக் கணக்கில் வாக்களித்த இளைஞர் காங்கிர்சாரைத் திரட்டி கூடங்குளத்திற்கே போக வேண்டாமா.

உடனே போய் காங்கிரஸ் எத்தனை மக்கள் சக்தியோடு இருக்கின்றது என்பதனை எல்லொருக்கும் காட்டுங்கள்.

                                  பெரியாரின் கருப்புச் சட்டை

கருணாநிதி அவர்கள் மீண்டும் கருப்புச் சட்டைக்கு வந்து விட்டார். பெரியார் எந்தப் போராட்டம் நடத்தினாலும் தடையை மீறி சிறைச்சாலைக்குப் போவார். ஆனால் இவர்கள் கருப்புச் சட்டை போட்டுக் கொண்டு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பார்களாம். பெரியார் ஆண் பிள்ளை



நெல்லையில் பள்ளி வாகனத்தின் கதவு திறந்து ஒரு மாணவி விழுந்து காயப் பட்டிருக்கின்றார். இன்னொரு பள்ளி வாகனம் தீப் பிடித்து எரிந்திருக்கின்றது. படித்த அதிகாரிகளின் பிச்சைக் காரத்தனம் இவற்றிற்குக் காரணம். அவர்கள் வீடுகளிலும் குழந்தைகள் இருக்கின்றன. யார் நினைக்கின்றனர்.

தனியார் பள்ளிகள் பணத்தை அள்ளிக் குவிக்கின்றன. ஆசிரியர்களுக்கு சரியான ஊதியம் தருவதில்லை. யார் கேட்கின்றனர். பள்ளிக் கிளைகளோபெருகிக் கொண்டேயிருக்கின்றன. பல பெரிய கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமித்திருக்கின்ற அரசு நிலங்கள் பல கோடி பெறும். அரசு திமுகவினர் ஆக்கிரமித்திருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கும்.

முதலமைச்சருக்கு எதுவும் தெரியாமல் பன்னீர் செல்வம் அவர்கள் பார்த்துக் கொள்வார்.

                                         புரியவில்லை

செங்கோட்டையன் இப்போது ஜெயக்குமார்.அமைச்சர்கள் மாற்றம் புரியவில்லை.

Tuesday, October 2, 2012

எந்த யுகம்


கையால் நூற்று
கையால் நெய்து
கதரைத்
தந்தது
காந்தி யுகம்

பொய்யாய்ப் பேசி
பொய்யாய்
வாழும்
புரட்டர்கள்
வாழ்வது
இந்த யுகம்

 

Saturday, September 29, 2012

இன்று இருதய தினமாம்

இன்று இருதய தினமாம்.இன்று மட்டுமாவது இருதயத்தோடு வாழ வேண்டுகின்றார்கள் போல.

இருதயம் நன்றாக இருக்க வழிமுறைகள் சொல்லுகின்றனர்.சிகரெட் பிடிக்காதே.உப்பு சீனியை(சர்க்கரையை) குறைவாக ப்யன்படுத்து. முடிந்தால் பயன் படுத்தாதே. கொழுப்பு உணவு வகைகளை விட்டு விடு. மாடிப் படிகளை ஏறிக் கட. விரைவு உணவகங்களில் சாப்பிடாதே. பல வழி காட்டுதல்கள்.

நல்லதை நினை நல்லதைச் செய் தவறான வழியில் பொருளீட்டாதே.
அடுத்தவர் வாய்ப்புகளை பறிக்காதே.பொறாமை கொள்ளாதே. வாய்ப்புகளை தவறுக்கு பயன் படுத்தாதே. ஆமாம் சட்டப் பேரவை நாடாளுமன்ற உறுப்பினரானால் மக்களுக்குச் சேவை செய். அந்தப் பதவிகளை வைத்து நீத்யற்ற மூறையில் போருளீட்டாதே.கல்வி கற்றதன் பயனாகக் கிடைத்த அரசு வேலை வாய்ப்பில் ஊதியத்திற்கு மேல் பொருளிட்டாதே. பேருந்திற்கு மட்டும் காசு வைத்துக் கொண்டு அரசு அலுவலகங்களை நம்பி வரும் ஏழைகளை அலைய விடாதே. கல்வி நிலையங்களை கொள்ளையடிப்பதற்காக நிறுவாதே. காந்தி காமராஜர் படேல் சாஸ்திரி கக்கன் லூர்தம்மாள் சைமன்  வினோபா பாவே என்ற மனிதர்களைப் போல் மனிதனாக வாழ். குறளை பேசவும் எழுதவும் மட்டும் பயன் படுத்தாதே.
உன் குடும்பம் என்பது மனித குலத்தின் உதவியின்றி வாழ முடியாது என்று உணர். அதை விட்டு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் அது அரசியல் பணியாக இருந்தாலும் அரசுப் பணியாக இருந்தாலும் கையூட்டு வாங்காதே.
இப்படியெல்லாம் இருந்தால் மட்டுமே போதும் உனது இதயம் நோயற்றது.
இவைதான் நோய்க்குக் காரணங்கள்.

வள்ளுவர் சொல்லுகின்றார். தந்நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின் தன்நெஞ்சே தன்னைச் சுடும் என்கின்றார். குற்ற உணர்வு உன்னை நோய்க்
காளாக்கிக் கொன்று விடும்.

ஈன்றாள் பசி காண்பாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை என்கின்றார்.

நேர்மையாக இருந்தாலே இதய நோய் வராது. நன்றாகச் சாப்பிடலாம்.

மன்மோகன் சிங்கிற்கும் சோனியா அம்மையாருக்கும் இதயம் இருந்திருந்தால் வாணிகம் செய்ய வந்து தான் கிழக்கிந்தியக் கம்பெனி நமது நாட்டை அடிமை செய்து விட்டது என்ற வரலாறு நினைவிற்கு வரும்.
அதற்காகத்தான் சுதேச எண்ணம் மேலோங்கச் செய்தார் காந்தி அடிகள் வெளி நாட்டுத் துணிகளை எரித்தார் வ.உ.சி.

மன்மோகன் சிங் அரசு அதிகாரியாக் இருந்தவர். நான் இது வரை கொண்டிருந்த கருத்திற்கு மாறாக சோனியா காந்தி அவர்கள் ஒரு வெளி நாட்டுக்காரர்.

பி.எல்.480 மூலம் கோதுமை தருவதாக அமெரிக்கா சொன்ன போது அதை அன்றைய மத்திய அரசு(காங்கிரஸ்) ஏற்றுக் கோண்ட போது அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராக இருந்து கொண்டே அதனை சென்னைக் கடற்கரை போதுக் கூட்டத்தில் எதிர்த்துக் குரல் கொடுத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.

இங்கே யாரும் வரலாறு குறித்துச் சிந்திப்பதில்லை. ந்மது தலைவர்களுக்கு இதயமே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பது மருத்துவ உலகத்திற்கே புரியாத பெருஞ்சாவாலாக உள்ளது.
என்று உணர்கின்றேன்.