Sunday, June 8, 2008

பணிந்தே வெல்வோம்

       தாயாக  வேண்டும்  நான்  உங்களாலே
                   தளிர்க் கொடியாள் வேண்டி  நின்றாள் விவேகாநந்தத்
      தூயாரை  வங்கக தேசத் துறவி தன்னை
                   துடித்தெழுந்தார்   அம்மா  என்  அம்மா என்றார்
      சேயானேன்   உங்களுக்கு   இன்றே  இங்கே
                   சிறப்பான  தாய்  பெற்றேன் பெற்றேன்  என்றார்
      காயான  மனத்தாளோ  கனிந்து  நின்றாள்
                   கால்களிலே விழப்போனாள்  தடுத்தார்  ஞானி


     தாயானீர்  மகனானேன்   என்ற   பின்னர்
                   தாய் மகனின்  கால்  பற்றல்  நீதியாமோ
    போய்  வாரும்  என்  தாயே  உலகமெங்கும்
                   போற்றி  நிற்பேன் உம்மை  எந்தன்  தாயே என்று
    நீர்  வாரும்  கண்களுடன்  அந்த  அன்னை
                    நெக்குருகிச் செல்கின்றாள் தனை  உணர்ந்து
    பார் போற்ற  இன்றும் அந்தத்  துறவி  வாழும்
                    பாங்கதனை  உணர்ந்தோம்  நாம்  பணிந்தே வெல்வோம்

1 மறுமொழிகள்:

said...

Anbulla Ayya, Vanakkam. Ungalathu valiapoo "thamizhkadal" alagu, arpautham. Ithu enathu muthal varugai.Meendum meendum enathu varugai thodarum.Santhippom Insha Allah.
S.A.Shahul Hameed,
6/44 North Ayyapuram Street,
Kadayanallur- 627751
92866 52800