Thursday, July 8, 2010

சிவத் தமிழே

நல்லவனாய் வாழ வைத்த நாயகனே நன்றி
நாடோறும் புகழ் வழங்கும் நல்லவனே நன்றி
அல்லவரை அகற்றி வைத்த அன்புடையோய் நன்றி
அறிவானார் துணை தந்த அஞ்செழுத்தே நன்றி
பல் விதத்தில் நல் நண்பர் தந்தவனே நன்றி
பாப் புனைய பைந்தமிழைப் பரிசளித்தோய் நன்றி
செல்லும் வழி தனி லெங்கும் சிறப்பளித்தோய் நன்றி
சிவத்தமிழே தவத்தழகே வணங்கி நின்றேன் போற்றி

0 மறுமொழிகள்: