Wednesday, July 21, 2010

வெறுமை மிஞ்சும்

தவம் செய்ய ஆசை கொள்வார் முதலில் ஒரு
தரமான வாழ்க்கையினைக் கொள்ள வேண்டும்
சிவ நெறியில் செல்வதென்றால் ஒழுக்கம் வேண்டும்
செந்தமிழில் பண்பாடு காக்க வேண்டும்
இவை யெல்லாம் கொண்டவர்க்கே செல்வம் வரும்
இல்லை யென்றால் இழி பெயர் தான் கொள்ள வேண்டும்
அவம் இதை உணராதார் தவ நெறியில் செல்வம்
அகப்படும் என்றலைந்தாலோ வெறுமை மிஞ்சும்

1 மறுமொழிகள்:

Anonymous said...

இவை யெல்லாம் கொண்டவர்க்கே செல்வம் வரும்//இவ்வாறு இல்லாதவர்கள் கூட முதிய வயது வரை பித்தலாட்டம்,புரட்டு பேசி ஏமாற்றி மகிழ்ச்சியாக செல்வத்துடன் வாழ்கிறார்களே அய்யா?