Friday, July 16, 2010

சிலையே கூட

சிலை வைக்க வேண்டாமே நல்லவர்க்கு
சேறு அள்ளிப் பூசியவர் எல்லாம் வந்து
வலை வலையாய் மாலைகளைப் போடுகின்றார்
வாய் நிறைந்த பொய் வசனம் பேசுகின்றார்
அலை அலையாய்க் கூட்டங்கள் கூட்டுகின்றார்
அரி தார நாட கங்கள் நடத் துகின்றார்
பல வேடப் பாவியரின் கரங்கள் பட்டு
பதைபதைத்து நிற்கும் அந்தச் சிலையே கூட

0 மறுமொழிகள்: