Monday, July 19, 2010

தமிழன்னை வேண்டி நிற்பாள்

பண்பாடு இல்லாத வார்த்தைகளைப்
பழகிடுவார் தமிழரென்றால் இல்லை இல்லை
கண் போலப் பண்பாட்டைப் போற்றுதற்கு
கனிவு மொழி வேண்டும் என்ற வள்ளுவனின்
தென் பாட்டுத் திருக்குறளைப் போற்றார் தம்மை
தீந் தமிழர் என்று சொன்னால் தமிழாம் அன்னை
புண் பட்டுப் போய் நிற்பாள் புலம்பிடுவாள்
புறங் கூறும் அவர் மரணம் வேண்டி நிற்பாள்

0 மறுமொழிகள்: