Monday, November 8, 2010

உமிழுவார்கள்

கை பிடித்துக் கால் பிடித்து வாழுகின்றார்
கவிஞரென்றும் சொல்லுகின்றார் என்ன செய்ய
பொய்யுரைத்துப் பணம் சேர்த்தோர் தங்களது
புறக்கடையை அடுக்களையைப் பேணுகின்றார்
மெய்யற்ற துறவிகளின் தொண்டராகி
மென் மேலும் நூல் எழுதிப் பணமும் கொள்வார்
அய்யகோ இவரெல்லாம் வாழ்வதாக
ஆர் நினைப்பார் காறித் தான் உமிழுவார்கள்

0 மறுமொழிகள்: