Wednesday, November 10, 2010

அபிராமி கேட்க வேண்டும்

அறிவற்ற பணக்காரர் தம்மையெல் லாம்
அடிமையென வாக்கி அவர் பணத்தில் நன்கு
செறிவாகிப் பறக்கின்றார் விமானம் தன்னில்
செந்தமிழைக் காட்டி அங்கு ஏய்க்கின்றார் காண்
விரிவாக்கி பண மழையில் நனைகின்றார் பார்
வெற்றி வெற்றி என்று வேறு நடிக்கின்றார் காண்
பொறியற்ற விலங்கை விடக் கேவலங் காண்
புல்லர் தமை அபிராமி கேட்க வேண்டும்

0 மறுமொழிகள்: