Sunday, November 14, 2010

பெருமை கொள்வோம்

நேரு என்ற மா மனிதன் பாரதத்தை
நெஞ்சுக் குள்ளே வைத்துக் காதலித்தான்
ஊரு லகம் எல்லாமே போற்றும் நல்ல
உயர் குணங்கள் அனைத்தையுமே கொண்ட தோழன்
சீருடைய சிந்தனைகள் கொண்ட மேலோன்
செம்புடலின் காந்தியவர் தந்த செல்வம்
யாரவர்க்கு நட்பு என்றால் குழந்தைகளே
யாம் அவரைப் பாடுவதில் பெருமை கொள்வோம்

0 மறுமொழிகள்: