Monday, September 3, 2012

பெணகளை பேணுங்கள்

ஒரு பெண் பலரைத் திருமணம் செய்து ஏமாற்றியிருக்கின்றார் என்று கைது செய்யப் பட்டிருக்கின்றார்.

ஒரு பெண் தான் ஒரு ஆணோடு கொண்டிருந்த உறவை பார்த்ததாக சிறுவனைக் கொலை செய்திருக்கின்றார்.

ஒரு பெண் சொந்த மகனையே தனது ஆண் ந்ண்பனின் உறவுக்காகக் கொலை செய்திருக்கின்றாள்.


நமது ஊடகங்கள் உடனே இது குறித்துப் பரபரப்பாகச் செய்திகள் வெளியிடுகின்றன.

ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டுமென்றால் அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி வைத்துள்ளனர். தாயைத் தண்ணீர்க் கரையிலே பார்த்தால் மகளை வீட்டில் பார்க்க வேண்டம் என்பார்கள்.

தொலைபேசியில் ஒரு பெண் அழைத்த உடன் அவள் அழகாயிருக்கின்றாள்
என்ற உடன் அவளுக்கு கேட்ட பணம் எல்லாம் தந்து அவளைத் திருமணம் செய்து கொண்ட இந்த ஆண்களை என்ன செய்வது.

பெரியவர்களுக்குத் தெரியாமல் செய்தால் கூட நண்பர்கள் இருப்பார்கள் தானே .அவர்கள் மூலமாக விசாரித்துத் தெரிந்து கொண்டிருக்கலாம் தானே.
அழகான் பெண் என்றவுடன் நண்பர்கள் பார்த்து விடக் கூடாது என்ற எண்ணம் தானே காரணம்.

பழகியவுடன் பணம் கேட்கின்றாளே என்ற எண்ணம் கூட எல்லாமல் பணம் தந்திருக்கின்றார்களே. இங்கே காதல் எங்கே வருகின்றது. உடல் வெறும் உடல். முதலிலேயே உறவிற்கு சம்மதிக்கின்றாளே என்று கூட யோசனையில்லையே. உடலை விரும்பியவர்கள் தானே இவர்கள். அருள் கூர்ந்து இதைக் காதல் என்று சொலாதீர்கள்.

அண்ணி தன் கொழுந்தனைச் சிறுவனைக் கொல்லுகின்றாள்.தாய் மகனைக் கொல்ல முயலுகின்றாள்.

இங்கேயும் உடல் பெண்ணிற்கு இருக்கின்றது. அதற்கான உணர்வுகள் எப்படிப்
பட்டவை அதற்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டிய ஆண்கள் தங்களுக்குப் பயன்பட மட்டும் தான் பெண்ணின் உடல் என்று கருதுவதனால்
வரும் கேடு தானே.அந்தப் பெண்ணின் உடலுக்குத் தேவையான உதவிகளை
முறையாகச் செய்வது ஆணின் கடமை என்பதனை மற்ப்பதனாலும் மறைப்ப
தனாலும் விளைகின்ற கொடுமைதானே

இவர்கள் நல்ல காதலை(காமத்தை) அவர்களுக்குத் தராத போதும் இவர்கள்
அது குறித்த சிந்தனையே இல்லாமல் இருக்கின்ற போதும் .சில நேரம் இவர்களால் இயலாத போதும் சாய்ந்து கொள்ள ஒரு தோள் தருபவனிடம் சரியாக அவள் உணர்வுகளைப் புரிந்து கொண்டவனோடு அவள் போனால் அதை கள்ளக் காதல் என்கின்றீர்கள். தன்னைப் புரிந்து கொள்ளாமல் இந்தச்
சமூகம்  அவதூறு பரப்பும் என்கின்ற  அச்ச உணர்வு பார்த்து விட்ட குழந்தையைக் கொல்லும் அளவிற்கு அவர்களைத் தள்ளி விடுகின்றது என்று
எந்த ஆடவனாவது உணர்கின்றானா.அவளைப் பொறுத்த வரையில் நாம் சொல்லுகின்ற கள்ளக் காதலன் தானே நல்ல காதல் தந்தான்.

பாரதி சொல்லுவான்

பேணுமொரு ஆண் மகனின் காதலினை வேண் டியன்றோ
பெண் மக்கள் கற்பு நிலை பிறழுகின்றார் என்று.

நம்மைப் பேணுகின்ற பெண்ணை நாம் பேண வேண்டாமா.

2 மறுமொழிகள்:

said...

அருமையாச் சொன்னீங்க சார்...

said...

ayya!thodarattum thangal pani!
gopala.narayanamoorthy,namakkal.