Wednesday, September 26, 2012

மரண தண்டனை

ஆறுகளில் மணல் அள்ளுவது மரங்களை வெட்டுவது என்பவை யார் ஆண்டாலும் நிற்பதில்லை. காரணம் ஆட்சிப் பொறுப்பிற்கு யார் வந்தாலும் இதனைத் தொடர்ந்து செய்வதற்கென்றே சில குடும்பத்தினர் திராவிட இயக்கங்கள் இரண்டிலும் இருந்து கொள்ளுகின்றனர். எந்த ஆட்சி என்றாலும் பிரசிசினை இல்லையல்லவா.

ஆனால்  இவர்கள் முதுகலைப் பட்டங்கள் வேறு(படிக்கவில்லை) வாங்கியிருக்கின்றனர். முறையான கல்வி என்றால் தாம் செய்வது எதிர்கால சந்ததியினருக்குச் செய்கின்ற மிகப் பெரிய கேடு என்று உணர்ந்திருப்பார்களே.அவர்கள் குழந்தைகளும் தானே இந்த மண்ணில் வாழப்
போகின்றனர்.

அவர்களுக்குக் கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்கத்தானே இந்தக் கொள்ளை
கள். அந்தப் பணம் எதிர்கால உயிர் வாழ்க்கைக்கு உதவாது என்பது முறையாகக் கல்விக்க் கூடங்கள் நடத்துபவர்களிடம் முறையான ஆசிரியர்க
ளிடம் கற்றிருந்தால் தானே இவர்கள் சிந்தனையில் வரும்.தங்கள் சந்ததியினரும் இயற்கை மழைக்கென அளித்திருக்கின்ற எல்லா வளங்களையும் அழித்தால் உயிர் துறக்க வேண்டிய பரிதாப நிலைக்கு ஆளாவர்கள் என்று உணர்வார்கள்.

களக்காடு மலையில் அடிக்கடி தீப் பிடிக்கும் இவர்கள் தான் காரணம். இதில் இன்னொரு வேடிக்கை சமூக விரோதிகளுக்குச் சாதீயப் பின்னணி.

என் சமூகத்தில் ஒருவன் தவறு செய்கின்றான் என்றால் அவனைப் பிடித்து
காவல் துறை வசம் ஒப்படைத்தால் தானே நாம் மனிதர்கள், அங்கே இன்னொரு அசிங்கம் காவற்றுரையே சாதிகளின் கூடாரமாகத் திகழ்வது
தான்.

இதில் மருத்துவர்கள் சமூக விரோதச் செயல்கள் செய்தால் கைது செய்யக்
கூடாது பொறியாளர்கள் செய்தால் கைது செய்யக் கூடாது வழக்கறிஞ்ர்கள்
தவறு செய்தால் கைது செய்யக் கூடாது. ஏன் இந்த் அட்டூழியங்கள். அப்படி
யென்றால் ஏழைகள் பாட்டாளிகள் மட்டும்தான் தவறு செய்பவர்களா.

இதில் மிகப் பெரிய கொடுமை நமது அரசியல். ஒற்றை வேட்டியொடு வாழ்ந்த தேசத் தந்தை நான்கு வேட்டிகளோடு வாழ்ந்த பெருந்தலைவர் கிழிந்த வேட்டி களோடு வாழ்ந்த கக்கன்.ஒற்றை வேட்டியை துவைத்து காய வைத்து தினம் உடுத்தி வந்த தோழர் ஜீவா.

தளி இந்தியக் கம்யூனிஸ்ட் சட்டப் பேரவை  உறுப்பினர் திராவிட இயக்கங்களைத் தண்டியவராக இருக்கின்றார்.

மருத்துவத்திற்கு வந்த பெண்ணிடம் தவறு செய்கின்ற மருத்துவர் தண்டிக்கப் பட வேண்டியவரா கிரிமினல் வழக்கறிஞராகப் பணியாற்ற வேண்டியவர் கிரிமினல் வேலைகள் செய்தால் கைது செய்ய வேண்டாமா.போடாத சாலைக்கு பணம் பெறுகின்ற பொறியாளர் கைது செய்யப் பட வேண்டாமா.
பள்ளை மாணவியிடம் தவறாக நடக்கின்ற ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்
கள் கைது செய்யப் பட வேண்டாமா.

மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்பதிலே உறுதியாக இருக்கின்ற நான் சுய லாப நோக்கோடு இயற்கை வளங்களி அழிக்கின்ற இந்த அயோக்கியர்களுக்கு மரண் தண்டனை தந்தால் நன்றாக இருக்கும்  என்று
கருதுகின்றேன். இன்றும் என்றும் மனித உயிர்கள் உடல் நலத்துடன் வாழ
இயற்கை அருளியுள்ள கொடைகளை தங்கள் பண வேட்டைக் காக அழிக்கின்ற இவர்கள் பல கோடி உயிர்களோடு விளையாடுகின்றவர்கள்.
உணர்ச்சி வசப்பட்டுக் கொலை செய்து விட்டுப் பின் உட்கார்ந்து அழுகின்றவன் மரண தண்டனைக்கு ஆளாவது பரிதாபம்.

நன்கு தெரிந்து கொண்டு இயற்கை வளங்களை அழிக்கின்ற இந்தப் பாதகர்கள் மரண தண்டனைக்குரியவர்கள்.

அணுமின் நிலைய ஆபத்தை விட இவர்கள் ஆபத்தானவர்கள். எந்தத் தலைவரும் இது குறித்துப் பேச மறந்து விட்டார்களே ஏன். மறதி ஒரு கொடிய நோய்.

வானத்தில் அமுதம் இருப்ப்தாகச் சொல்வத்னை ஒத்துக் கொள்ளாத வள்ளுவ
பேராசான்
வானத்தில் இருந்து மழையின் மூலமாக வரும் நீர்தான் உயிர்க்குலங்கள் அனைத்திற்கும் அமுதம் என்கின்றான்.

வான் நின்று உலகம் வழங்கி வருதலான்
தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று

2 மறுமொழிகள்:

said...

உண்மை கருத்துக்கள்...

உணர வேண்டியவர்கள் உணர வேண்டும்...

said...

ஆபத்தான அல்பங்கள்