Saturday, November 21, 2009

என் மதம்

ஆதரவற்று எங்கோ தெருவோரத்தில்
அழுது கொண்டிருக்கின்ற நாயதற்கு
தேடிச் சென்று ணவளித்து காத்தல் ஒன்றே
தெளிவான என் மதம் ஆம் உணர்வீர் நீரே
கோடிக் கணக்கான பணத்தைச் சேர்த்து
கோயில் கட்டும் கொள்ளையர் தம் கோயிலுக்குள்
நாடி நிற்கும் ஆண்டவனார் வரவே மாட்டார்
நமக்குரைத்தார் துறவி விவேகானந்தருமே

0 மறுமொழிகள்: