Wednesday, November 25, 2009

காக்க வேண்டும்

மதம் காட்டிப் பிழைப்பவர்க்கு மானம் இல்லை
மதியில்லை மனிதர் என்னும் நினைப்பு மில்லை
இதம் காட்டி மதம் சொல்வார் சொல்லிச் சொல்லி
இடையினிலே பேதங்கள் ஊட்டிடுவார்
விதம் விதமாய்க் கதை சொல்வார் அனைத்தும் இங்கே
வினையாகி மனிதத்தை அழித் தொழிக்கும்
மதம் பிடித்து ஆடுகின்ற அவரைக் கண்டு
மருந்தளித்துக் கரை சேர்த்துக் காக்க வேண்டும்

1 மறுமொழிகள்:

said...

மதம் என்ற சொல்லையே தமிழ்க் கடலாகிய தாங்கள் பயன்படு்த்தக் கூடாது.மதத்தைப் பேய் என்று சொல்லிச் சென்றார்,வள்ளலாரும்! சமயம் என்பதே நன்று. மக்களைச் சமைப்பதற்குத்தான் சமயங்களே தவிர, குழப்புவதற்கு அல்ல. தங்களைப் போன்றோர்தான் காக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். உதவுக, மக்கள் மேன்மையுற.