Saturday, November 28, 2009

தியாகத் திருநாள்

இறைவனது கட்டளையை தலைமேலேற்று
இனிய மகன் தனை அறுக்க மனமுவந்த
சிறந்து நின்ற இபுராஉறிம் தன் வழியாய்
செய்தி சொன்னார் இறைவனுமே மிகச் சிறப்பாய்
உளம் நிறைய இறைவனையே கொண்டு உள்ளார்
உயர்ந்து நிற்பார் இறையருளைக் கொண்டு நிற்பார்
தனை மறந்து இறைவனையே நினைவாய்க் கொண்டு
தான் நிற்பார் வென்று நிற்பார் தியாகமாவார்

1 மறுமொழிகள்:

said...

மிகவும் அருமை