Sunday, November 8, 2009

பதிலைத் தாரும்

கோடிகளுக்கு எல்லையிட்டு அவர்கள் தம்மின்
கொள்ளைகளைத் தடுத்தவர் தம் ஆலைகளை
வாடி நிற்கும் ஏழை குலத்திளையோர் தம்மின்
வசம் தந்து அவர் தம்மின் திறமை கொண்டு
தேடி என்றும் வேலை இன்றி அலையும் ஏழை
திரள் தன்னை முழுதாக உழைக்க விட்டால்
கேடு என்ன வந்து விடும் தலைவர்களே
கேட்கின்றேன் வெட்கமின்றிப் பதிலைத் தாரும்

0 மறுமொழிகள்: