Tuesday, September 28, 2010

பழியும் கொள்வார்

வாபரையும் வழி பட்டு அய்யப்பனின்
வாசலிலே நிற்கின்றார் கோஷத்தோடு
பாபரையும் ராமரையும் இவ்வாறே தான்
பக்குவமாய்ப் புரிந்து கொண்டால் ரத்தம் இல்லை
காவல் செய்யும் தெயவத்தை உணர்ந்தார் இந்தக்
கண்ணியத்தைக் கடைப் பிடிப்பார் கருணை கொள்வார்
பாவமதைச் செய்வதற்கு பிறந்தார் மட்டும்
பல சொல்லிப் பிரித்தாண்டு பழியும் கொள்வார்

1 மறுமொழிகள்:

said...

அண்ணா! இரு தினங்களுக்கு முன் சிங்கப்பூர் ஒலி 98.6 வானொலியில் தங்கள் கேள்வி பதில்
நிகழ்ச்சி நடந்ததா? அந்த நிகழ்ச்சி முடிந்தே நான் இணைய வானொலி திறந்தேன் . ஆனால் அதன் பின் பல நேயர்கள் தொலைபேசியில் தங்கள் பதில்களை மிக சிலாகித்தார்கள். ஒருவர் அழுது விட்டேன்
என்றார்.
பாராட்டுகள் உங்கள் புலமைக்கு; தொடரட்டும் உங்கள் பணி!

மீள் ஒலிபரப்புச் செய்தால் கேட்கக் கிடைக்கும்.