Sunday, September 12, 2010

கேட்பாரோதான்

பாரதியை நினைந்தாரா மறந்தே போனார்
பாவி மகன் காந்தியினை மறைத்தே வைத்தார்
ஊர் முழுதும் மதுக் கடைகள் காந்தியாரின்
ஊரிலேயும் மதுக் கடைகள்-- கறிக் கடைகள்
சீர் மிகுந்த வள்ளலார் பெயரிலேயே
சிறப்பாகத் திறப்பதற்கு விருப்பம் கொள்வார்
யார் இவரைக் கேட்பார்கள் மக்கள் தானே
இலவசத்தைத் தேடி நிற்பார் கேட்பாரோதான்

0 மறுமொழிகள்: