Thursday, September 16, 2010

ஒழிந்து போகும்

உடல் சார்ந்த வெறி கொண்டே வாழுகின்றார்
உளம் சாரா மானிடரகள் உலகமெங்கும்
படம் எடுத்து விட்டாராம் சாமி என்பார்
பதை பதைத்துத் துடிக்கின்றார் கற்பு காப்பார்
தினம் தினமும் செய்தியாக வருவதெல்லாம்
தெரிந்தும் ஏன் ஆடுகின்றார் புரியவில்லை
உளம் கண்டு வாழ்வதற்குப் பழகி விட்டால்
உடல் சார்ந்த வெறி அதுவும் ஒழிந்து போகும்

0 மறுமொழிகள்: