Saturday, September 18, 2010

அய்யா என்றார்

பார்ப்பவர்கள் அனைவரையும் கதைகளுக்குள்
பாத்திரங்கள் ஆக்கிடுவார் என்ற எண்ணம்
ஊர்க்காரர் அனைவருக்கும் உண்டு பண்ணி
உயர்வாகக் கதை சொல்லும் வண்ணதாசன்
பேர் சொல்லி உங்களை நான் அழைக்கமாட்டேன்
பெருமையாக அய்யா என்றழைத்திடுவேன்
சீர் மிகுந்த உங்களது செந்தமிழைச்
செவிமடுத்த காரணத்தால் அய்யா என்றார்

0 மறுமொழிகள்: