Wednesday, February 16, 2011

நபி பெருமான்

தொழுது நிற்பீர் இறைவன் அவன் ஒருவனையே
தொல்லுலகை வாழ்க்கையினைத் தந்தவனை
அழுது நிற்கும் ஏழையர்க்கு உதவி நிற்பீர்
அல்லாஉற் அவர் ஆசி முழுதும் உண்டு
பழுதற்ற வாழ்க்கையினைக் கொண்டு வாழும்
படைத்தவரை ஐந்து நேரம் பணிந்து நில்லும்
விழுதாகி மனித குலம் தழைப்பதற்காய்
வீரர் வந்தார் நபி பெருமான் இன்று போற்ற

0 மறுமொழிகள்: