Monday, February 28, 2011

நாணம் கொள்வாள்

எத்தனையோ கொடுமைகளைச் செய்து வாழ்வார்
எவர் சொத்தும் தன் சொத்தாய் ஆக்கிக் கொள்வார்
சத்தியமாய் வெட்கம் என்ற சொல்லை இவர்
சாக்கடையாம் வாழ்க்கையிலே கொண்டதில்லை
முத்தமிழைக் கூட இவர் பெற்ற தாக
முட்டாள்கள் பலர் இங்கு முழங்கிடுவார்
எத் திசையும் புகழ் கொண்ட தமிழாம் தாயோ
இவர் பிறந்த காரணத்தால் நாணம் கொள்வாள்

0 மறுமொழிகள்: